Home இலங்கை மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வடமாகாண சபையில் அஞ்சலி – சபை ஒத்திவைப்பு

மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வடமாகாண சபையில் அஞ்சலி – சபை ஒத்திவைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண சபையின் 67 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.

அதன் போது சபை அமர்வு ஆரம்பமாக முன்பதாக நேற்றையதினம் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு  இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

அதனையடுத்து சபை அமர்வுகள் பத்து நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு , வடமாகாண சபை அமர்வு மீண்டும் கூடி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை சபை அமர்வு ஆரம்பமாகும் என அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். அதனை அடுத்து சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.

 

img_2820img_2817img_2821

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More