Home இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டாம்:-

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டாம்:-

by admin

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொய்ப்பிரச்சாரம் செய்ய வேண்டாம் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்திய நபர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்காரர்கள் இரண்டு கப்பல்களை கைப்பற்றியிருந்தனர் எனவும் அதனை விடுவிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சியினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கப்பல்களை கைப்பற்றிக் கொள்வது கடற் கொள்ளையாகும் எனவும் சர்வதேச கடல் சட்டங்களின் அடிப்படையில் கடற்படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More