Home இலங்கை பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது – ஜனாதிபதி

பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது – ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பௌத்த மாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதம் இன்றி அரசியல் சாசன சரத்துக்கள் உருவாக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய அரசியல் சாசனத்தில் நாட்டுக்கு பாதகமான எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய அரசியல் சாசனத்தில் நாட்டை பிளவடையச் செய்யக் கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை எனவும் உத்தேச அரசியல் சாசனம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்;வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் போதிலும் நாட்டின் ஐக்கியத்திற்கோ பௌத்த மதத்திற்கோ பாதக நிலைமை ஏற்படக்கூடிய எந்தவொரு சரத்தும் கிடையாது எனவும்  அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தனித் தீர்மானங்களின் அடிப்படையில் உருவாக்கப்படாது என குறிப்பிட்டுள்ள அவர் மக்கள் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டே இந்த அரசியல் சாசனம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More