89
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கொழும்பின் பிரபலமான மகளிர் பாடசாலை ஒன்றின் நீச்சல் பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட ஆறு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் வெளிநாட்டுப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
கொக்கேய்ன் மற்றும் ஹாசீஸ் ரக போதைப் பொருட்களை இவர்கள் வைத்திருந்தார்கள் எனவும் இவர்கள் போதைப் பொருளைப் பயன்படுத்திக் கொண்டிருந்த போதே காவல்துறையினர் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love