அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ம் திகதி வரையில் ஜாலியவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றிய காலத்தில் விக்ரமசூரிய அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அறிவிக்காது நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது அண்மையில் விக்ரமசூரிய கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment