Home இலங்கை கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்தோம் நீதிமன்றில் வாக்குமூலம்

கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்தோம் நீதிமன்றில் வாக்குமூலம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நேற்றுமுன்தினம் கிளிநொச்சி  செல்வாநகர்  பகுதியில்  வைத்து  ஆயிரத்து  இருநூறு  கிராம்  கஞ்சாவுடன்  நீர்கொழும்பைச்  சேர்ந்த  முப்பது வயதான  சந்தேக நபர்  ஒருவர்  கிளிநொச்சிப் பொலிசாரால்  கைதுசெய்யப்பட்டிருந்தார்

குறித்த சந்தேக  நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால்  கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தி இருந்தனர்  இதன்போது  குறித்த சம்பவம் தொடர்பாக  மன்று சந்தேக நபரை  வினவிய பொழுது  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிற்கு  முன்னாள்  அமைந்துள்ள  துர்க்கை  அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும்  தாம்  சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு  கஞ்சாவில் ரொட்டி சுட்டு  படைப்பதாகவும் திறந்த மன்றில்   தெரிவித்துள்ளார்

குறித்த சம்பவம் தொடர்பாக  குறித்த ஆலயத்தின்  பதிவு மற்றும்  ஆலயத்தை  சோதனையிட  மன்று வழங்கிய  உத்தரவுக்கு அமைய கிளிநொச்சிப்  பொலிசார்  மற்றும்  கரச்சி பிரதேச  செயலக உதவித்திட்டமிடல்  பணிப்பாளர்  அமல்ராஜ்  மற்றும் கலாச்சார  உத்தியோகத்தர் கிராம  அலுவலர் கின்சான்கொல்  அபிவிருத்தி  உத்தியோகத்தர்  ரெயிநோலட்  சோதனை நடவடிக்கையில்  ஈடுபட்டிருந்தனர்  இருப்பினும்  எவ்விதமான  சந்தேகத்திற்குரிய  பொருட்களும்  மீட்கப்படவில்லை.


அத்துடன்  குறித்த ஆலயம்  பதிவற்ற  ஆலயம் என்பதுடன்   தனியார்  காணி  ஒன்றில்  அத்துமீறி  அமைக்கப்பட்டுள்ளதுடன்  ஒருபகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பது  குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More