Home இலங்கை பிரதமர் மக்களின் ஜனநாயகத்துடன் விளையாடுகின்றார் – ஜீ.எல்.பீரிஸ்

பிரதமர் மக்களின் ஜனநாயகத்துடன் விளையாடுகின்றார் – ஜீ.எல்.பீரிஸ்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மக்களின் ஜனநாயகத்துடன் விளையாடுகின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுமக்களின் ஜனநாயகத்தை பிரதமர் நகைப்பிற்குரியதாக எடுத்துக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ள அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என பிரதமரிடம் கேட்ட போது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என கிண்டலாக பதிலளித்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை முடக்கியுள்ளதாகவும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமை ஜனநாயக மீறலாகும் எனவும் குறிப்பிட்டுள்ள ஜீ.எல்.பீரிஸ் அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்ப்பலை வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More