Home இலங்கை மீண்டும் ஜனாதிபதியானால் நல்லாட்சி எனும் போர்வையில் குற்றப்புரிந்தவர்களை தண்டிப்பேன் – மகிந்த

மீண்டும் ஜனாதிபதியானால் நல்லாட்சி எனும் போர்வையில் குற்றப்புரிந்தவர்களை தண்டிப்பேன் – மகிந்த

by admin

மீண்டும் ஜனாதிபதியானால்  நல்லாட்சி எனும் போர்வையில் குற்றப்புரிந்தவர்களை தண்டிக்க முடியும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பக்கம் ஊடாக டுவிட்டர் வலைத்தள உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோதே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி: உங்களுடைய தம்பி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

மகிந்த: அரசியில் அமைப்பின் பிரகாரம் தகுதியுள்ள எந்தவொரு நபரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும்

கேள்வி: 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீங்கள் மைத்திரிபாலவை எதிர்த்து போட்டியிடுவீர்களா?

மகிந்த: நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல எதிர்காலத் தலைவர்களுக்கு இதுவொரு சரியான நேரம் என நினைக்கின்றேன்.

கேள்வி: பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படும் வரவு செலவுத் திட்டங்கள், அரசியலமைப்பு திருத்தங்கள் என இது போன்ற பல விடயங்களில் ஏன் பங்கெடுப்பதில்லை.

மகிந்த: எனக்கு இயலுமான நேரங்களில் பாராளுமன்றுக்கு செல்வேன். மேற்கூறிய விடயங்கள் தொடர்பான வாக்கெடுப்புகளில் எனது நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளேன்.

கேள்வி: முஸ்லிம் சமூகம் உங்கள் மீது மீண்டும் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளது. நாட்டில் உள்ள கடும்போக்குவாதிகளுக்கு எதிராக உங்களுடைய எதிர்கால ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

மகிந்த: தற்போதும் எதிர்காலத்திலும் கடும்போக்குவாதிகளுக்கு இடமளிக்கமாட்டோம். நாம் எப்போது நாட்டின் ஒற்றுமைக்காக செயற்படுவோம்.

கேள்வி: சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் நோக்கம் என்ன? சீனாவிடம் நீங்கள் கூறியது என்ன? சீனா உங்களுக்கு விடுத்த வேண்டுகோள் என்ன?

மகிந்த: சீனா எப்போது இலங்கையின் நண்பனாக இருந்து வருகின்றது. அவர்களின் ஆதரவை நாம் மதிக்கின்றோம். மக்களையும் சூழலையும் பாதிக்காத வகையில் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோளாக இருந்தது.

கேள்வி: எட்கா தொடர்பில் உங்களதும், எதிரணியினரினதும் நிலைப்பாடு என்ன?

மகிந்த: நாம் எப்போது அதற்கு எதிராகவே உள்ளோம். இருக்கும் ஒப்பந்தங்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இலங்கையர்களின் வேலை வாய்ப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது.

கேள்வி:  தேசிய பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காணுமா?

மகிந்த: தேசிய பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் தீர்க்கமானதாக இல்லை.

கேள்வி: எதிர்காலத்தில் உங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நிதி மோசடி விசாரணைப்பிரிவை தொடர்ந்தும் கொண்டு செல்லுமா?

மகிந்த: நிதி மோசடி விசாரணைப்பிரிவு ஒரு சட்டவிரோத நிறுவனம். இது தொடர்பில் ஆராய்ந்து நல்லாட்சி எனும் போர்வையில் குற்றப்புரிந்தவர்களை தண்டிக்க முடியும் என்றார்.

கேள்வி: உங்களது அரசாங்கத்துக்கும் பொதுபல சேனாவுக்குமிடையிலான உண்மையான தொடர்பு என்ன? அதேவேளை சிறுபான்மையினருக்கெதிரான அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏன் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

மகிந்த: பொதுபல சேன இப்பொழுது யாருடன் இணைந்துள்ளார்கள் என்பதனை தற்போது உங்காளால் தெளிவாக பார்க்க முடியும்

கேள்வி:  அம்பாந்தோட்டையில் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு எதிராக இருக்கின்றீர்கள். எனினும் உங்களுடைய ஆட்சியில் சாம்பூர் நிலத்தை வெளிநாட்டு விற்பனை செய்ய ஏன் முடிவெடுத்தீர்கள்?

மகிந்த: சம்பூர், நுரைச்சோலை போன்ற திட்டங்களை இலங்கை சார்ந்தவையாக இருந்த போதும் இந்தியாவினால் அமைக்கபடவிருந்தன. எனினும் நாம் யாருக்கு நிலத்தை விற்பனை செய்யவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More