குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்காவில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்பத்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் மீது பன்றி இரத்தம் மற்றும் பன்றிக் கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இஸ்லாமிய நிறவெறித் தாக்குதல்களாக இந்த தாக்குதல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
15 கிலோ மீற்றர் இடைவெளியில்; நடத்தப்பட்டுள்ள இந்த இரண்டு தாக்குதல்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முஸ்லிம்கள் அமைதி பேண வேண்டுமென முஸ்லிம் மதத் தலைவர்கள் கோரியுள்ளனர்.
Spread the love
Add Comment