Home இந்தியா தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் – மிருக நலவாரிய உறுப்பினர்கள் கோரிக்கை:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் – மிருக நலவாரிய உறுப்பினர்கள் கோரிக்கை:

by admin

உச்ச நீதிமன்ற தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மிருக நலவாரிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்திய மிருகநல வாரிய உறுப்பினர்கள் என்.ஜி.ஜெயசிம்மா, கவுரி மவுலேக்கி ஆகியோர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் சேவல் சண்டைக்கு தடை விதித்து ஐதராபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவை தமிழகத்திலும், ஆந்திராவிலும் உள்நோக்குடன் மீறப்படுவது குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் எனவும் இந்திய மிருகநல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு மற்றும் காளை வண்டி ரேஸ் தொடர்பாக மிருக நல வாரியத்தின் நிலைப்பாடு சரியானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக வெளிப்படையாக பேட்டி கொடுத்து இருக்கிறார்கள்.

சில இடங்களில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு தொடங்கி விட்டதாக தெரியவருகிறது. இதனால் அரசியல் சட்டம் அவமதிக்கப்பட்டது மட்டுமல்ல இது இந்திய குடியரசின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்த இரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மத்திய அரசு தலையிட்டு; ஆட்சியை கலைத்து விட்டு இந்த மாநிலங்களில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டுமென தெரிவிக்க்பபட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More