Home இலங்கை வடமாகாணம் தொடர்ந்தும் பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட்டு வருகின்றது சி.வி.விக்னேஸ்வரன் :

வடமாகாணம் தொடர்ந்தும் பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட்டு வருகின்றது சி.வி.விக்னேஸ்வரன் :

by admin


வடமாகாணம் தொடர்ந்தும் பயங்கரவாத கண்ணோட்டத்திலேயே நோக்கப்பட்டு வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரம்டன் நகருக்கும், வடமாகாணத்திற்கும் இடையே இரட்டை நகர் உடன்படிக்கையை கைச்சாத்திடும் வகையில், கனடா சென்றுள்ள முதலமைச்சர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது சிறப்புரை ஆற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கில் அத்துமீறிய கைதுகளும், சட்டத்திற்கு புறம்பான பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளும் தொடர்ந்து வருகின்றன எனவும் அங்கு நீதியை சமமாகப் பெற்றுக் கொள்வதில் பாரிய தடைகள் காணப்படுவதுடன், வடக்கு மீதான பயங்கரவாத கண்ணோட்டம் தொடர்ந்தும் நீடிக்கிறது எனவும் அவர் தெரிவிதி;துள்ளார்.

அதேவேளை, மாகாண சபைகள் தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் செயற்பட வேண்டியுள்ளதால் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கத்தை எதிர்ப்பார்த்தே காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாதளவிற்கு வடக்கில் வறுமை தலைத்தூக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More