Home இலக்கியம் இலங்கையில் நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலங்கையில் நிலவி வரும் வறட்சியான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  எதிர்வரும் இரண்டு மாதங்களில் போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட 70 சதவீத மழைவீழ்ச்சிதான் இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த நிலையில், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதம் என்பது சாதாரணமாகவே குறைவான மழைவீச்சியைக் கொண்ட காலமாகும் எனவும் தெரிவித்துள்ள அவர்இந்த மாதங்களில் சாதாரண மழைவீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது என்ற போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள நீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இது அமையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மார்ச் மாத நடுப்பகுதியில்தான் இலங்கைக்கு மழை கிடைக்கக்கூடிய காலநிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More