Home இலங்கை ஒரு சில நடவடிக்கைகளில் நல்லெண்ணம் – ஏனைய விடயங்களில் மத்திய அரசின் விருப்பமே தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன – சி.வி:-

ஒரு சில நடவடிக்கைகளில் நல்லெண்ணம் – ஏனைய விடயங்களில் மத்திய அரசின் விருப்பமே தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன – சி.வி:-

by admin

மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை வெளிகாட்டும் ஒரு சில நடவடிக்கைகளை மாத்திரமே வடமாகாணத்தில் மேற்கொண்டிருக்கின்றது எனவும் பெரும்பாலான விடயங்களில் தாங்கள் நினைப்பதையே தங்கள் மீது திணிப்பதாகவும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெறுகின்ற நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றுள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசனுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், முன்னேற்றகரமாக நடைபெற்றிருக்கும் விடயங்கள் தொடர்பாக அவர் தன்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார் எனத் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்திருக்கும் தமிழ் மக்கள் வடக்கில் முதலீடுகளை செய்வதில் ஆட்சேபனை இல்லை என அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார் எனவும் அந்த விடயங்கள் முன்னேற்றகரமான விடயங்களாக உள்ளன எனவும் ஏனைய விடயங்கள் மத்திய அரசாங்கம் தாம் நினைத்தவற்றையே செய்யும் விடயங்களாகவே காணப்படுகின்றதென அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More