Home இலங்கை முல்லைத்தீவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 39 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் வைத்தியசாலையில்

முல்லைத்தீவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 39 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் வைத்தியசாலையில்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இன்று  காலை  11.30  மணியளவில்  முல்லைத்தீவு  விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தி   ல் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்ததன் காரணமாக  விசுவநாதர் ஆரம்ப வித்தியாலய  மாணவர்கள் 30 பேரும்  ஆசிரியர்கள் 5 பேரும்   விஸ்வமடு மகா வித்தியாலய மாணவர்கள் 9 பேரும்  ஆசிரியர்கள் 2 பேரும்    குளவிக்கொட்டுக்கு  இலக்காகி  அவசர  நோயாளர்  காவுவண்டிகள்  மூலம்   தர்மபுரம்  வைத்தியசாலையில்  சேர்க்கப்பட்டு  சிகிச்சை  பெற்றுவருகின்றனர்

இதில்  இரண்டு  ஆரம்பப்பிரிவு மாணவர்களை   அவசர  நோயாளர்  காவுவண்டி மூலம்  கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளனர்

இதனால் இரண்டு குறித்த பாடசாலைகளும்  அவசரநிலையை  கருத்திற்  கொண்டு     மூடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More