Home இலங்கை புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். தடை செய்யப்பட்டுள்ள அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினதும் தடையை நீக்குமாறும் தெரிவு செய்யப்பட்ட தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் கண்காணிப்பு செய்யுமாறும்  விக்னேஸ்ரன், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிவி;வகார அமைச்சின் கொன்சோல் காரியாலயமொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டத்தரணியாகவும் நீதவானாகவும் கடமையாற்றியுள்ளதாகவும் நாடு ஒன்றின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் தாம் நன்கு அறிவதாகவும் தெரிவித்துள்ள அவர் பயங்கரவாதிகளாக மக்களை பார்க்கும் மனோ நிலை மாற்றப்பட வேண்டுமெனவும்  வலியுறுத்தியுள்ளார்.

புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் அவர்களின் ஒத்துழைப்புடன் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.