Home இலங்கை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை இன்றையதினம் குற்றப்புலனாய்வு பிரிவினரால்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போது, வழக்கு குறித்த மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி குறித்த வழக்கு  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு அறிக்கையினை  சமர்ப்பிக்காமை தொடர்பில் நீதவான் கடுமையான  எச்சரிக்கை  விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் , உயிரிழந்த மாணவர்களுக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More