குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கம்பஹாவில் உள்ள பசிலுக்கு சொந்தமான காணி தொடர்பான வழக்கில் சட்டமா அதிபரின் அறிவுரை இதுவரை பெறப்படாமை காரணமாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பசிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் கம்பஹா , ஒருதொட பகுதி காணி தொடர்பான வழக்கு நேற்றையதினம் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு தொடா்பில் இதுவரை சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவில்லை என தொிவித்த நீதிமன்றம் விசாரணையை மே 5ம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.
Spread the love
Add Comment