Home இலங்கை திருகோணமலையில் கடற்கரையில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்

திருகோணமலையில் கடற்கரையில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்

by admin

திருகோணமலையில்   அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சோலையடி கடற்கரையில் குளிக்கச்சென்ற இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் கடலில் குளிப்பதற்காகச் சென்ற ஆறு பேரில் மூவரை அலை நீரில் அடித்துச் சென்றுள்ள நிலையில்  ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளதாகவும்  இருவர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை செல்வநாயகபுரம் பாடசாலைக்கு அருகில் வசித்து வரும்  24 வயதான கேசவன் பிரசாத் மற்றும் 28 வயதான துரைராசா கிரிஷாந்தன்  ஆகியோரே  காணமல் போயுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More