Home இலங்கை யாழ்.அரசடி சந்தியில் வாள் வெட்டு. வர்த்தக நிலையத்தின் மீதும் பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்.அரசடி சந்தியில் வாள் வெட்டு. வர்த்தக நிலையத்தின் மீதும் பெற்றோல் குண்டு வீச்சு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.அரசடி சந்தி பகுதியில் உள்ள கடை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியும் , வாள் வெட்டு நடத்தியும் இளைஞர் குழுவொன்று அட்டகாசம் புரிந்துள்ளது.

அரசடி சந்திக்கு நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட இளைஞர் குழு அங்கிருந்த கடை ஒன்றின் முன்பாக நின்றவர்கள் மீது வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தி நடத்தியதில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த 24  மற்றும் 20 வயதுடைய இரண்டு பேர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து குறித்த கடையின் மீது பெற்றோல் குண்டுவீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர். பெற்றோல் குண்டு வீசப்பட்டதால் கடை தீப்பிடித்து எரிந்ததனை அடுத்து அயலவர்கள் ஒன்று கூடி தீயினை அணைத்தனர்.

அதேவேளை இந்த தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் கடையில் இருந்த இரகசிய கமராவில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் தற்போது காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More