Home இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் வலுப்படுத்தப்பட வேண்டும் – லக்ஸ்மன் யாபா

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் வலுப்படுத்தப்பட வேண்டும் – லக்ஸ்மன் யாபா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது  இதனைத் தெரிவித்த அவர் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடையே ஜனாதிபதி கொண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

கணக்காய்வாளர் என்பவர் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே பொறுப்புக்கூற வேண்டியவராவார் எனவும், அமைச்சர்கள் எவருக்கும் பொறுப்புக்கூறவேண்டிய அவசியம் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More