Home உலகம் பிரசல்ஸ் விமான நிலைய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரிடம் விசாரணை

பிரசல்ஸ் விமான நிலைய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரிடம் விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகள்

பிரசல்ஸ் விமான நிலைய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான மொகமட்  அப்ரினி( Mohamed Abrini) யிடம் உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிரசல்ஸில் வைத்து  மொகமட்  அப்ரினி கைது செய்யப்பட்டிருந்தார். தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக பிரதான சந்தேக நபருடன், மொகமட்  அப்ரினி காரில் சென்றதாகத்தெரிவிக்கப்படுகிறது.

பாரிஸ் தாக்குதல் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் கைவிரல் அடையாளங்களுடன், மொகமட்  அப்ரினியின் கைவிரல் அடையாளங்கள் ஒத்துப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More