Home இலங்கை சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் – நோர்வே

சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் – நோர்வே

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு உதவத் தயார் என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைகான நோர்வே தூதரகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தமிழ் புலம்பெயர் சக்திகள் சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது. நோர்வேவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் புலம்பெயர் தமிழ் தரப்பே சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.

உத்தியோகபூர்வ அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டால் சுமந்திரன் கொலை முயற்சி குறித்த விசாரணைகளுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் உதவத் தயார் என தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட போதிலும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை தெரிவித்துள்ளது. காவல்துறையினர் இது குறித்து கோரிக்கை விடுத்தால் உதவத் தயார் என தூதரகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

rajan February 6, 2017 - 6:16 am

சமந்தாவுக்கும் , சுமந்தாவுக்கும் , சூ நாதாவுக்கும் , முதல் காக்கை வன்னியன் விருதா, அல்லது கதிர்காமர் விருதா என்பதை சொல்லிவிட்டு விசாரனைக்கு ஒத்து ஊழையிடுங்க.
ராஜன்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More