Home இலங்கை நல்லாட்சி அரசாங்கம் மோசடிகளில் ஈடுபடக் கூடாது – சந்திரிக்கா

நல்லாட்சி அரசாங்கம் மோசடிகளில் ஈடுபடக் கூடாது – சந்திரிக்கா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்போதைய நல்லாட்சி  அரசாங்கம் மோசடிகளில் ஈடுபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தில் மோசடிகள் இடம் பெறுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தனகல பிரதேசத்தில் நேற்றைய தினம்  இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்து வருவதாகவும், எனினும் தற்போதைய அரசாங்கத்திலும் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ள சந்திரிக்கா அவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என  கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More