Home இலங்கை தங்களுடனான யுத்தத்தின் போது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு இராணுவம் கால்களை வழங்கியுள்ளது

தங்களுடனான யுத்தத்தின் போது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கு இராணுவம் கால்களை வழங்கியுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிறிலங்கா இராணுவத்தினருடனான யுத்தத்தின் போது தங்களது கால்களை இழந்த முன்னாள் போராளிகளுக்கும், மற்றும் யுத்த காலத்தில் கால்களை இழந்த பொது மக்களுக்கும் செயற்கை கால்களை இராணுவம் வழங்கியுள்ளது.

கிளிநொச்சியில்  ஒத்துழைப்பு  மத்திய  நிலையத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட முப்பது பேருக்கு இன்று (07-02-2016 ) கால்கள்   வழங்கி வைக்கப்பட்டன.

அமெரிக்க நிதியுதவியில் மாற்று  கண்டி குண்டகசாலை வலுவுள்ளோருக்கான நிலையத்தினரால் நடைமுறைப்படுத்தப்படும் இவ் உதவித் திட்டத்தை கிளிநொச்சி பாதுகாப்பு படையினா்  ஒழுங்கு செய்திருந்தனர்.

காலை பத்து மணிக்கு இடம்பெற்பெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின்  பாதுகாப்பு படைகளின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல்அஜித் காரியகரவன மற்றும் மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன உள்ளிட்ட படை பொறுப்பதிகாரிகள் வழங்கி வைத்தனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More