Home பிரதான செய்திகள் பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி :

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி :

by admin

இந்தியாவில் நடந்து வரும் பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில்  நடைபெற்று வருகிறது.

இதில் புவனேஸ்வரில் நேற்று  நடைபெற்ற போட்டியில்   நாயணச்சுழற்சியில் வென்ற  நியூசிலாந்தை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136  ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு விளையாடிய  இந்திய அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140  ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொள்ளவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More