குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐ.எஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா மற்றும் துருக்கி ஜனாதிபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோர்கனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கும் இடையில் தொலைபேசி மூலம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இணைந்து செயற்படுவதாக இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தொலைபேசி உரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரிய குர்திஸ் வை.பி.ஜீ கிளர்ச்சியாளர்களுக்கும் அமெரிக்கா ஆதரவளிக்கக் கூடாது என துருக்கி ஜனாதிபதி கோரியுள்ளார்.