Home இலக்கியம் எழுக தமிழ்- பூவரசம் பூ! தீபச்செல்வன்

எழுக தமிழ்- பூவரசம் பூ! தீபச்செல்வன்

by admin

குருதி நிணம் தீரா மண்
பிணங்களும் எஞ்சாத தேசம்
சிதைமேடுகள் மீதும்குருதி

சிதலுறூம் காயம்

இராணுவ சப்பாத்துக்களின்
கீழ் எல்லாமும்

ஆனாலும் எழுந்தது தேசம்
அதனாலும் எழுந்தது தேசம்
சிறகுடைத்து வீசப்பட்ட
ஒரு பறவையின்
சிறகசைப்பைப்போல

கால்களற்றவரும் நடந்தனர்
கைகளற்றவரும் ஏந்தினர் கொடியை
விழிகளற்றவரும் ஏற்றினர் சுடரை
சொற்களற்றவரும் எழுதினர் பதாகையை
இல்லாதவர்களின் இருதயங்களைச் சுமந்து
தொண்டைக் குழிகளில்
நெடுநாளுறைந்த
பெருங்குரல்
காட்டாற்றைப்போலப் பெருக

இப்போதும்
வீழ்த்தப்பட்டவர்களின்
பெருஞ்சொற்களில் கனன்றது
வாழ்வின் கனவுதான்
பிரளயம் கடந்து
ஊழி கடந்து
அகல விரிந்து பூத்த
பூவரசம் பூப்போல.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More