பங்களாதேசின் பரித்பூர் மாவட்ட நெடுஞ்சாலையில் பேரூந்து ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த இரண்டு வாகனங்களும் மோதிக் கொண்டவுடன் வானில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதனால் வாகனங்கள் தீப்பற்றிக் கொண்டதாகவும் இதனாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment