Home இலங்கை கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி உதயம்

கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி உதயம்

by admin

முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர்  கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ள நிலையில் கட்சிக்கு  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனப் பெயரிப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவே குறித்த  அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாவின் தலைமையில் நடைபெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வின்போது கட்சியின் பொதுச் செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும், கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும் செயற்படவுள்ள அதேவேளை வடக்கு, கிழக்கில் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும்  கருணா தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சினை பதிவு செய்யும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளவும், மட்டக்களப்பில் கட்சி அலுவலகம் திறப்பதற்கும்  இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More