Home இலங்கை வடக்கு கிழக்கைஇணைத்து சமஸ்டியை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – மஹிந்த

வடக்கு கிழக்கைஇணைத்து சமஸ்டியை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – மஹிந்த

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிதாக அரசியல் சாசனம் அமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும் அரசியல் சாசனத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கே மக்கள் ஆதரவினை வழங்கியிருந்தனர் எனவும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மொனராகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைiயை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் நாட்டை பிளவடையச் செய்கின்றது என குற்றம் சுமத்தியுள்ள அவர் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஸ்டி ஆட்சியை உருவாக்குதவற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசனத்தின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது எனவும் புதிதாக அரசியல் சானத்தை உருவாக்க இடமளிக்க முடியாது எனவும் திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More