Home இலங்கை வடமாகாண அமைச்சர்கள் உள்ளட்ட குழுவினர் கேப்பாபுலவு மக்களை சந்தித்துள்ளனர்

வடமாகாண அமைச்சர்கள் உள்ளட்ட குழுவினர் கேப்பாபுலவு மக்களை சந்தித்துள்ளனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுக்க தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை  வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ,   வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ரி.ரவிகரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் எஸ்.சிவகரன்,  உள்ளிட்டோர் சென்று சந்தித்துள்ளனர்.

நேற்றைய தினம் சென்ற இவர்கள்  போராட்டத்தில் ஈடுபடும் பெற்றோருடன் பாடசாலை செல்லும் மாணவர்களின் நிலைப்பாடு குறித்தும், அவர்களுக்கான போக்குவரத்து தொடர்பிலும் கலந்துரையாடினர்.

எனினும் மாணவர்கள் தமக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும்வரை தாம் பாடசாலைக்கு செல்லப்போவதில்லை என்று கூறியிருந்த  போதும்  பெற்றோர்  மாணவர்கள் பாடசாலைக்கு செல்வார்கள் எனத் தெரிவித்ததற்கமைய  அதற்க்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அதற்;கான உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More