இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் ஆராய்வு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி  மாவட்டத்திற்கான  பேருந்து  நிலையம் அமைப்பது  தொடர்பிலான   கலந்துரையாடல்  ஒன்று  இன்று 15-02-2017  காலை  கிளிநொச்சி மாவட்ட  செயலகத்தில்  இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க  அதிபர்  சுந்தரம்  அருமைநாயகம்  தலைமையில்  கிளிநொச்சி மாவட்ட செயலக  மாநாட்டு  மண்டபத்தில்  ஆரம்பமான  கலந்துரையாடலில்  கிளிநொச்சி  மாவட்டத்திற்கான  பேருந்து  நிலையம்  அமைப்பதற்கான  திட்ட  முன்  மொழிவுகள்  மற்றும் அமைவிடம்   தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டதுடன்  கிளிநொச்சி  டிப்போ  சந்திக்கு  அருகாமையில்  பேருந்து  நிலையம் அமைப்பதற்கு  ஒதுக்கப்பட்ட  இடத்தினையும் பார்வையிட்டனர்

குறித்த இன் நிகழவில்  பாராளுமன்ற  உறுப்பினர் சி.சிறிதரன்   வடமாகாண  நகர அபிவிருத்திப் பணிப்பாளர் ,வடமாகான  தனியார் போக்குவரத்து சபைத்  தலைவர் ,தேசிய போக்குவரத்து  ஆணைக்குழு  உத்தியோகத்தர்கள் மாவட்ட வீதி அதிகாரசபை  உத்தியோகத்தர்கள் கரச்சி பிரதேச செயளர்  கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள்     எனப்  பலரும்  கலந்து கொண்டனர்


00

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.