Home இந்தியா தி.மு.க. வின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடுகிறார்கள்…

தி.மு.க. வின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடுகிறார்கள்…

by admin

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. வின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

நேற்று மாலை, தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும், அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நாளை சனிக்கிழமை சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளதாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என் ஆலோசிப்பதற்காகவும், சட்டசபையில் தி.மு.க. வின் நிலைப்பாடு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்காகவும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More