Home இலங்கை கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது -யாழ் ஆயர்

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது -யாழ் ஆயர்

by admin

கேப்பாப்பிலவு மக்கள் கடந்த 18 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தியும், இதுவரை அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது என யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைதெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் குறித்து யாழ். ஆயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விமான படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று சனிக்கிழமையுடன் 19 நாட்களாகியும்  எவ்வித தீர்வுமின்றி தொடர்வது மனவருத்தம் அளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு மக்களும் 16ஆவது நாளாக போராடி வருகின்றனர். தம் சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை நகரப்போவதில்லை என இம்மக்கள் மிக உறுதியாக இருப்பது எல்லாவகையிலும் நீதியானதும் நியாயமானதுமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லெண்ண அரசு உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண விரைந்து செயற்பட வேண்டும் என அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பேரால் அரசிற்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம் எனவும் இது தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More