Home இந்தியா சட்டசபை பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைப்பு – தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவு

சட்டசபை பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைப்பு – தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவு

by admin

கடும் அமளி காரணமாக சட்டசபை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும்  சபையை ஒரு வாரம் ஒத்தி வைக்கவேண்டும் எனவும்  எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகரின் மைக்கை மீண்டும் உடைத்து அமளி பண்ணி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுப்படி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் சட்டசபையை விட்டு வெளியேற மறுத்து திமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்துகின்ற நிலையில்   அவர்களுக்கும் அவைக் காவலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவையை நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள்  விடுத்த சபாநாயகர் தனபால்  தனக்கு நேர்ந்த கொடுமைகளை எங்கே போய் சொல்வேன கவலை வெளியிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More