Home உலகம் சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது – நாமல் ராஜபக்ஸ

சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது – நாமல் ராஜபக்ஸ

by admin


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா குண்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த போது தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் போதி பூஜைகளை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை  விதிக்கப்படவில்லை எனவும், சட்ட ரீதியாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா தண்டிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசியல் ரீதியான பழிவாங்கல்களே இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கம் பிரபாகரனை கொலை செய்தமைக்காகவும் வருந்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சந்திரிக்கா பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More