Home இலங்கை ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கை மீளவும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

by admin


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை  தொடர்பான  வழக்கை மீளவும்  விசாரிக்க உத்தரவிடுமாறு ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ்  தாக்கல்  செய்த  மேன்முறையீடு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

நீண்ட காலமாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் முடிவில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என் விசேட ஜுரிகள் சபை தீர்ப்பளித்திருந்தது.

எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விசேட ஜுரிகள்  சபை முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சட்டத்துக்கு முரணானது  எனவும் எனவே இந்த வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து  வழக்கை மீள விசாரணை செய்யுமாறும் உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் குறித்த மனு மார்ச் 28 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அன்றையதினம் நீதிமன்றத்தில் தகவலளிக்கும் படி, சட்டமா அதிபர் மற்றும் விடுவிக்கப்பட்ட ஐவருக்கும்  கடிதம்  அனுப்புமாறும் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More