Home இலங்கை ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கையர்கள் அச்சத்தில்

ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கையர்கள் அச்சத்தில்

by admin


அமெரிக்காவில் பல்வேறு இரகசிய தகவல்களை  அம்பலப்படுத்திய எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கையர்கள் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்னோவ்டன் அமெரிக்காவில் பல்வேறு இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியிருந்த நிலையில்  ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய இலங்கையர்கள் தாம் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் ஹொங்கொங் சென்று விசாரணை நடத்தியுள்ளதாக குறித்த இலங்கையர்களின் சட்டத்தரணிகள் சர்வதேச ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான விசாரணைகளின் ஊடாக அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு இலங்கையர்களில் ஒருவரான சுபுன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More