85
வட ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாஸ்ஜன் மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 காவல்துறை அதிகாரிகளும் தளபதி ஒருவரின் மனைவியும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்த அதிகாரிகள் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனது கணவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை கேட்டு சம்பவ இடத்துக்கு சென்ற பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love