ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவு இட்டு உள்ளார்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்ட போதே நீதிவான் அவ்வாறு உத்தரவு இட்டார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) பெண் படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் ஊர்காவற்துறை காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment