Home உலகம் வடகொரியாவுக்கு அனுமதித்திருந்த விசா இல்லாத பயணச் சலுகையை மலேசியா ரத்து செய்துள்ளது.

வடகொரியாவுக்கு அனுமதித்திருந்த விசா இல்லாத பயணச் சலுகையை மலேசியா ரத்து செய்துள்ளது.

by admin

வட கொரிய ஜனாதிபதியின்  சகோதரர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, வடகொரிய மக்களுக்கு அனுமதித்திருந்த விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்துள்ளது.  இக்கொலை தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டு  வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்துள்ளது. கிம் ஜாங்-நாம் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பல வடகொரியர்களை மலேசிய காவல்துறை தேடி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் பரஸ்பரம் விசா இன்றி பயணம் செய்யும் ஒப்பந்தம்  ஒன்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.  குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More