Home இந்தியா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு கோரிய மனு தொடர்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

by admin

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது  படுகாயமடைந்தவர்களுக்கு 15 லட்சம்  ரூபா  நட்டஈடு   வழங்க வேண்டும் என  இந்திய மாணவர்கள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கு தொடர்பில்  தமிழக அரசுக்கு   கடிதம் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மாணவர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்   தாம் கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  போராட்டம் நடத்திய போது   போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர்; தடியடி நடத்தியதாகவும் இதனால் தங்கள் அமைப்பை சேர்ந்த பலர்; படுகாயமடைந்துள்ளனர் எனவும் எனவே, படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 15 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்றில்; பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி  , குறித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு கடிதம்  அனுப்ப உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கு  விசாரணையை அடுத்த வாரத்துக்கு  ஒத்திவைத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More