பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியில் இன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போகைன்வில்லி பகுதியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தின் தெற்கே இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்றும் அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு இதேபகுதியில் கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக மூன்றுமுறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2100 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment