Home இலங்கை கறுப்பு துணியால் கண்ணைக்கட்டியவாறு கிளிநொச்சியில் போராட்டம்

கறுப்பு துணியால் கண்ணைக்கட்டியவாறு கிளிநொச்சியில் போராட்டம்

by admin

20-02-2017 திங்கள்  காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்   ஆரம்பிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை கிழமை பதின்முன்றாவது  நாளாக தொடர்கிறது

இன்று யாழ்ப்பாணத்திற்கு  ஜனாதிபதி அவர்கள் உத்தியோக பூர்வ  விஜயம்  ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு  துணியால் கண்ணைக்கட்டியவாறு   போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

எமது உறவுகளுக்கு இன்னம் பதிலளிக்காது  இந்த அரசு  பாரா முகமாக  இருக்கின்றது என்பதனைக்  காட்டுவதற்கு  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கறுப்பு  துணியால்  கண்ணைக்கட்டியவாறு   போராட்டம் முன்னெடுக்கப்படுதுவதாகவும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  விடயத்தில்  இனியும் காலம் தாமதிக்க  வேண்டாம் எனவும்  இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறல் விடயத்தில் ஜநா கால அவகாசம் வழங்க்க கூடாது என்றும்  காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்   போராட்டம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது

தங்களுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More