அணி வீரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என ஆர்சனல் கால்பந்தாட்டக்கழகத்தின் முகாமையாளர் Arsene Wenger தெரிவித்துள்ளார்.
பயிற்சியின் போது ஆர்சனல் வீரர் Alexis Sanchez சக வீரர்களுடன் முரண்பட்டு மோதிக் கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மைதானத்திலும் பின்னர் தங்குமிடத்திலும் முரண்பாடு நீடித்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என ஆர்சனல் முகாமையாளர் Alexis Sanchez உடன் தனிப்பட்ட முரண்பாடு எதுவும் கிடையாது என கூறியுள்ளார்.
Add Comment