Home இலங்கை வட மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு இன்று இடம்பெறுகின்றது.

வட மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு இன்று இடம்பெறுகின்றது.

by admin


வட மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று முற்பகல்  ஆரம்பமாகியுள்ளது.

குறித்த அமர்வு கடந்த மாதம் 22ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தபோதும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உடலநலக்குறைவு காரணமாக   பிற்போடப்பட்டிருந்தது.

முதலமைச்சர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்றைய அமர்வை பிற்போட முடியுமா எனக் கோரி வடக்கு மாகாண சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்துக்கு இன்றைய அமர்வை நடத்துவதுடன் இப்பிரச்சினை தொடர்பான பிறிதொரு அமர்வை எதிர்வரும் மே மாதம் நடத்தலாமென அவைத்தலைவர் பதில் அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More