Home இந்தியா தமிழக மீனவரை கடலில் சுட்டுக் கொன்றமை தொடர்பில் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு

தமிழக மீனவரை கடலில் சுட்டுக் கொன்றமை தொடர்பில் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு

by admin

தமிழக மீனவரை கடலில் சுட்டுக் கொன்றதாக இலங்கை கடற்படை மீது மண்டபம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  21 வயதான பிரிட்ஜோ உயிரிழந்ததுடன்  சரோண் என்பவர் அடைந்தார்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையைக்  கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்றதாக தெரிவித்து  இலங்கை கடற்படை மீது மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்ஜோவுடன் மீன்பிடிக்கச் சென்ற அருள் கிளிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில், இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More