இலங்கை பிரதான செய்திகள்

கலப்பு நீதிமன்றம் விசாரணைப் பொறிமுறைமை அரசியல் சாசனத்திற்கு முரணானது – ஜனாதிபதி


கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை அரசியல் சாசனத்திற்கு முரணானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனிதஉ ரிமைப் பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமை அமைக்க முடியாது எனவும்  அது அரசியல் சசானத்திற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது எனவும் நாட்டின் அரசியல் சாசனத்தில் இடமில்லாத போது எவ்வாறு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.