Home இலங்கை இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

by admin

இதன் பின்னர் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும்; கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் மீன்பிடி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும், பாரம்பரிய தொழிற்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

இலங்கை சார்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆரச்சியும் இந்தோனேசியா சார்பில் அந்நாட்டின் கடல்சார் அலுவல்கள் மற்றும் மீன்படி அமைச்சரும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர். ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இரு அரச தலைவர்களும் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டனர்.

இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோதுவுக்கு  இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றதனையடுத்து மேற்படி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More