படைவீரர்களின் சார்பில் ஜெனீவா செல்ல எவரும் முன்வரவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சர் தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தி வருவதாகவும் படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். படையினர் தரப்பின் நியாயத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தாம் ஜெனீவாவிற்கு செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்
Spread the love
Add Comment